Unicode அல்லது ஒருங்குறி என்பது
எழுத்துக்களையும்,வரியுருக்களையும் கணித உபகரணங்களில் பயன்பத்வதற்கென
உருவாக்கப்பட்ட ஒரு குறிமுறை நியமமே ஆகும்.இன்று உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும்
பல்வேறு வரிவடிவங்கள் இந்நியமத்தில் அடங்கியுள்ளது.
- தமிழ்
- சிங்களம்
- இந்தி
- மலையாளம் போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம
தமிழிற்கு
என 128 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.அவற்றில் தமிழ் உயிர்எழுத்துக்கள்,மெய்
எழுத்துக்கள்,இலக்கங்கள்,கொம்பு,விசிறிகள் மற்றும் ஷ,ஜ,ஹ,க்ஷ,ஶ்ரீ,ஸ
ஆகிய கிரந்த எழுத்துக்கள் உள்ளடக்கப்பகின்றன. Unicode
ல் தட்டச்சு செய்யும்போது Unicode Font
அவசியம்.
Unicodeல் தட்டச்சு
செய்து அனுப்புவதினால் Font மாற்றம் ஏற்படும் என்ற
பிரச்சினையின்றி இலகுவாக படித்துக்கொள்ள முடியும்.தற்போதுள்ள பெரும்பாலான
கணனிகளில் இந்நியம முறையை செயற்படுத்த முடியும். Windows XP க்கு பின்னர் வந்த எல்லா Windows பதிப்புக்களிலும் மற்றும்
இன்று பயன்பாட்டிலுள்ள Linux இயங்குதளங்களிலும்
வாசிக்கலாம்.இவற்றுக்காக தனியாக Font சேர்க்கவேண்டிய
அவசியமில்லை.
வழமையாக
தமிழில் மின்னஞ்சல்களை அனுப்பும்போது பெறுபவரின் கணனியில் குறித்த இருத்தல்
வேண்டும்.ஆனால் Unicodeல் தட்டச்சு செய்யப்பட்டால் அவ்வாறான கஷ்டங்கள் இல்லை. Unicodeல் தட்டச்சு செய்யப்படும் எழுத்துக்கள்
கணனித்திரையில் பார்க்கும் ஒழுங்கில் பதியப்பட்டிருக்காது.உயிர்,மெய் புணர்தலின்
பிரகாரம் பதிவுசெய்யப்பட்டிருக்கும்.ஒரு சொல்லை அழிக்கும்பொழுதும் புணர்ச்சி
அடிப்படையிலேயே எழுத்துக்கள் இல்லாதுசெய்யப்படும்.உலகிலுள்ள பல மொழிகளையும்
ஆதரிக்கும் இக்குறியீட்டுமுறை இன்று பிரபல்யம் அடைந்து வருகிறது
No comments:
Post a Comment